Show all

மதுரை உயர்அறங்கூற்றுமன்ற கிளை உத்தரவு! ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது

06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளையில் தூத்துக்குடியை சேர்ந்த பாத்திமா பாபு என்பவர் மனு பதிகை செய்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக அறங்கூற்றுவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் தலைமைச் செயலர், வேதாந்த நிறுவன இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க முப்பது நாள் அறங்கூற்றுமன்றம் அவகாசம் வழங்கிய நிலையில் அதுவரை ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கான எந்த சிறு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என அறங்கூற்றுமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,008. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.