மறைந்த முதல்வர் செயலலிதா படத்தை, அரசு அலுவலகங்களில் இருந்து அகற்ற வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசியல் நாகரிகம் இல்லாமல், ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். மக்களைப் பற்றி சிந்தித்து, மக்களுக்காகவே வாழ்ந்தவர் செயலலிதா. அவரை மக்களின் மனதில் இருந்து நீக்க முடியாது. செயலலிதா மீது காழ்ப்புணர்ச்சியோடு விமர்சனம் செய்துள்ள துரதிர்ஷ்டவசமானது. இதற்கு என் கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். விமர்சிப்பதை நிறுத்திவிட்டு, ஸ்டாலின் மக்களுக்கு பயனுள்ள பணியை செய்ய வேண்டும். அப்படி செயலலிதாவின் படத்தை அகற்ற முயன்றால், தமிழகத்தில் அவரின் படம் இல்லாத இடமே இல்லை என்ற நிலை உருவாகும்’ என கூறியுள்ளார். சசிகலா குற்றவாளி என்றால் செயலலிதாவும் குற்றவாளிதான். செயலலிதா அரசியல் எதிரிகளால் குற்றவாளி ஆக்கப் பட்டார் என்றால் சசிகலாவும் அவ்வாறானவர்தான். பன்னீர் செல்வத்தின்- சசிகலா குற்றவாளி! அதே நேரம்;;; செயலலிதா புனிதர்! என்கிற முயற்சியில் உள்குத்து ஏதும் இல்லையே?
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



