23,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடலை சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. இதுதொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கு சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் அறங்கூற்றுவர்கள் ரமேஷ் மற்றும் எஸ்எஸ் சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. அப்போது மெரினாவில் செயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவதாக மனுதாரர்கள் தெரிவித்தனர். டிராபிக் ராமசாமியும் மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது தொடர்பான வழக்கை திரும்பப் பெறுவதாக கூறினார். இதைத்தொடர்ந்து மறைந்த முதல்வர் செயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதற்கான 5 வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,873.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



