கர்நாடகாவின் சட்ட
விரோத அணை திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடக அரசின் செயல்பாடுகள் தமிழக மக்களை புண்படுத்தும் விதமாக இருக்கிறது என ஸ்டாலின்
குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தை அதிமுக அரசு உடனடியாக நடுவண் அரசின்
கவனத்துக்கு எடுத்து செல்ல வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கர்நாடக அரசின்
அணை கட்டும் திட்டத்திற்கு தடை விதிக்க கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும்.
கர்நாடக அரசு தமிழக மக்களின் காவிரி உரிமையை வஞ்சிக்க முற்படுவது வருத்தமளிக்கிறது
என ஸ்டாலின் வேதனை தெரிவித்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



