Show all

உயர்அறங்கூற்றுமன்றம் அதிரடி தீர்ப்பு! இராகி நகரில் தினகரன் பெற்ற வெற்றி செல்லும்

06,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: முன்னாள் முதல்வராக இருந்த செயலலிதா மறைவுக்கு பிறகு இராகி நகர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு இராகி நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. 

இதில் சுயேச்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளும் அதிமுகவின் வேட்பாளர் மதுசூதனனை வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார்.

தினகரன் வெற்றியை எதிர்த்து வழக்கு சுயேச்சை வேட்பாளர் ரவி என்பவர் சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பணப்பட்டுவாடா செய்ததால் தினகரன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க கோரியிருந்தார் ரவி.

இந்த வழக்கு விசாரணை பல கட்டங்களாக சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய அறங்கூற்றுவர் ஜெயச்சந்திரன் இராகி நகர் தொகுதியில் தினகரன் பெற்ற வெற்றி செல்லும் என தீர்ப்பு வழங்கினார்.

மேலும் தினகரன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று கூறிய அறங்கூற்றுவர் சுயேச்சை வேட்பாளர் ரவி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,824.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.