தமிழகத்தில் நாளை மறுநாள் திங்கட் கிழமை முதல் இரண்டு கிழமைகளுக்கு முழு ஊரடங்கு தவிர்க்க முடியாத காரணங்களால் நடைமுறைப் படுத்தப்படுகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 25,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழகத்தில் நாளை மறுநாள் திங்கட் கிழமை முதல் இரண்டு கிழமைகளுக்கு முழு ஊரடங்கு தவிர்க்க முடியாத காரணங்களால் நடைமுறைப் படுத்தப்படுகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், முழு உடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது. 3000 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரிய கடைகள் வணிக வளாகங்கள் இயங்க கடந்த கிழமை முதல் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை தவிர தனியாக செயல்படுகின்ற மளிகை பலசரக்கு காய்கறிகள் இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12 மணிவரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. 50 விழுக்காடு வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும். இயங்கலை வணிக நிறுவனங்கள் அனுமதிக்கப்படும். அனைத்து உணவகங்களிலும் சிப்பச் சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்படும் தேநீர் கடைகள் 12:00 மணி வரை மட்டுமே செயல்படும். உள் அரங்குகள் மற்றும் திறந்தவெளி சமுதாய அரசியல் விளையாட்டு பொழுதுபோக்கு கல்வி கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது ஏற்கனவே அறிவித்தபடி இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் இறுதி ஊர்வலத்தில் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில் 20 ஆட்களுக்கு மேல் அனுமதி இல்லை. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை. எனினும் அன்றாடம் நடைபெறும் பூசை வழிபாட்டுச் சடங்குகள் வழிபாட்டுத்தலம் ஊழியர்கள் மூலம் நடத்துவதற்கு தடை இல்லை. குடமுழுக்கு மற்றும் திருவிழாக்கள் நடத்த அனுமதி இல்லை. கட்டாயத்தேவை பணிகளான பால் கொண்டுதருதல், நாளேடு செய்தி இதழ்கள் கொண்டுதருதல், தனியார் விரைவு அஞ்சல் சேவை, மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், சடுதி வண்டி மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத் துறை சார்ந்த பணிகள் அனைத்து சரக்கு வாகன போக்குவரத்து உழவர்கள் விளை பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்கள் உயிர்வளி எடுத்துச் செல்லும் வாகனங்கள் எரிபொருளை எடுத்துச் செல்லும் வாகனங்கள் ஆகியவை முழு உரடங்கின் போது அனுமதிக்கப்படும். வேளாண் உற்பத்திக்கு தேவையான பூச்சிக்கொல்லி உரம் விதை விற்பனை செய்யும் கடைகள் மூலம் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப் படும். அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும் . காய்கறி மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் 12:00 மணி வரை செயல்படும். நடைபெற்றுவரும் கட்டட பணிகள் மட்டும் அனுமதிக்கப்படும் ஊடகம் மற்றும் இதழியல் துறையினர் தொடர்ந்து பணியாற்றலாம். இந்த இருகிழமை ஊரடங்கு முன்னெடுப்பு காரணம்பற்றி இன்று(சனி), நாளை(ஞாயிறு) அனைத்து கடைகள், நிறுவனங்கள் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகின்றன.
நியாயவிலைக் கடைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரை செயல்படும்.
தன்னார்வலர்கள் அகவை முதிர்ந்தோர் மாற்றுத்திறனாளிகள் நோயுற்றவர்கள் சேவை வழங்குபவர்கள் தொடர்புடைய நிறுவனங்கள் வழங்கும் அடையாள அட்டை ஆவணங்களுடன் சென்று வர அனுமதிக்கப்படுகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.