சல்லிக்கட்டு வெற்றியைக்
கொண்டாட பிரமாண்டமாக 1100 கிலோ கேக்கை மாணவர்களுடன் சேர்ந்து இன்று வெட்டுகிறார் ராகவா
லாரன்ஸ். சல்லிக்கட்டுக்காக நடந்த மாணவர் மற்றும் இளைஞர்களின் போராட்டத்தில் தாமாகப்
போய் பங்கேற்று, சில உதவிகளையும் செய்தார் ராகவா லாரன்ஸ். இதற்காக அவர் முதல்வராக இருந்த பன்னீர் செல்வத்தைச்
சந்தித்தார். சல்லிக்கட்டு போராட்டம் வெற்றியடைந்ததுமே, பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி,
மாணவர்கள் அரசியலுக்கு வந்தால் ஆதரவு அளிப்பேன் என்றும் தெரிவித்தார். இப்போது சல்லிக்கட்டு வெற்றியைக் கொண்டாட முடிவெடுத்துள்ளார்.
மிகவும் கண்ணியத்துடனும் அமைதியாகவும் நடந்த சல்லிக்கட்டு போராட்டம், கடைசி நாளில்
வன்முறைக் களமாக மாற்றப் பட்டது. அதில் மிகுந்த மன வருத்தம் அடைந்ததாகத் தெரிவித்த
ராகவா லாரன்ஸ், இந்த வெற்றியை பிரமாண்டமாகக் கொண்டாட வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதன்படி போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்களுடன் இணைந்து சல்லிக்கட்டு வெற்றி விழாவை
1100 கிலோ பிரமாண்டமான கேக் வெட்டி இன்று கொண்டாடுகிறார் லாரன்ஸ். இதற்கு முன்பு 1040 கிலோ கேக் தான் உலக சாதனையாகப்
பதிவானது. அதை முறியடிக்கும் விதமாக 1100 கிலோ அளவில் திரைப்பட கலைஞர்கள், நடிகர்கள்
முன்னிலையில் கேக்வெட்டி கொண்டாடுகிறார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



