24,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் பொதுமக்கள் அறவழிப் போராட்டத்தில் எந்த அதிகாரியின் உத்தரவும் இல்லாமல், தன்னிச்சையாக ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக திட்டமிட்டு பச்சை படுகொலை நடத்திய கொடூரன் மீனாட்சி நாதன் துப்பாக்கிச் சூட்டின்போது 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும் வைகோ, பழ.நெடுமாறன், தினகரன், நல்லகண்ணு, தொல்.திருமாவளவன், சீமான், ஸ்டாலின், ஜி.கே.வாசன், முத்தரசன், சீதாராம் யெச்சூரி, கே.பாலகிருஷ்ணன், திருநாவுக்கரசர், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வந்தனர். மேலும் நடிகர்கள் கமல்ஹாசன் ரஜினிகாந்த், சரத்குமார், பாலாஜி ஆகியோரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்து காயமடைந்தவர்களை ஆறுதல் தெரிவித்தனர். ரஜினிகாந்த்- பச்;சை படுகொலை நிகழ்த்திய காவல்துறைக்கு ஆதரவாகப் பேசியதும், அதற்கு முன்புதான் ஸ்டெர்லைட் நிறுவனரைச் சந்தித்திருந்ததும் ரஜினி மீது தமிழ்மக்களுக்கு ஐயப்பாட்டைக் கிளப்பியுள்ளது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் திடீரென நடிகர் விஜய் உயிரிழந்தோர் வீடுகளுக்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தூத்துக்குடியில் ஸ்னோலின், ஜான்சி உள்ளிட்ட உயிரிழந்தவர்களின் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய நடிகர் விஜய், தலா ஒரு லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கினார். பகல் நேரங்களில் வந்தால் கூட்டம் கூடும் என்பதாலும், துக்க வீடுகளில் என்னைப் பார்க்க கூட்டம் கூடினால் அது வருத்தமளிக்கும் ஒன்றாக இருக்கும். அதனால் நள்ளிரவில் வந்தேன். என்றாராம் விஜய். ஒவ்வொருவர் வீட்டிலும் 15 நிமிடம் வரை அமர்ந்து ஆறுதல் அளித்துப் பேசிவிட்டுக் கிளம்பியுள்ளார். ரஜினிகாந்தின் அளப்பறைக்கு முன்னால், விஜய் அவர்களின் கண்ணியம் எண்ணி மகிழ்வதாயிருக்கிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,811.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.