05,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம்-சென்னை எண்வழிச் சாலைத் திட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்புமணி ராமதாஸ், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் சென்னை உயர்அறங்கூற்று மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவ்வழக்கு இன்று அறங்கூற்றுவர்கள் சிவஞானம் தலைமையிலான அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சேலம்-சென்னை எண்வழிச் சாலைக்கு, நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து அறங்கூற்றுவர்கள் உத்தரவிட்டனர். மறு உத்தரவு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்றும் தெரிவித்தனர். தற்போதைய திட்டப்படி சாலை அமைக்கும் பகுதியில் 80 வேளாண் நிலங்களும், 10 விழுக்காடு வனப்பகுதியும் வருகின்றன என்றும், நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பாணையின் படி 5 மாவட்டங்களில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி இருக்க வேண்டும் என்றும், ஆனால் அரசு நடத்தவில்லை என்றும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,886.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



