12,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: முன்னாள் முதலமைச்சர் செயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க அனைத்து அணியினராலும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அனைத்து பகுதிகளிலும் செயலலிதாவின் படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன. செயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அம்மா ஸ்கூட்டர் திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. முதற்கட்டமாக கலைவாணர் அரங்கத்தில் தமிழக அரசு சார்பில் நடைபெறும் விழாவில் மோடி கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு, தமிழக அரசின் ஸ்கூட்டர் மானியத்தை, மோடி கையால் வழங்க அழைக்கப் பட்டுள்ளார். அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் செயலலிதா சிலையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைக்க உள்ளனர். இதேபோல் அ.தி.மு.க. மாவட்ட, கிளை அலுவலகங்கள், பிற மாநிலங்களில் உள்ள அ.தி.மு.க. அமைப்புகள் சார்பிலும் செயலலிதா பிறந்தநாள் விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. சுகாதாரத்துறையால் அரசு மருத்துவமனைகள் மற்றும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் மூலம் தமிழ்நாடு முழுவதும் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. 700 சிறப்பு மருத்துவ முகாம்களும், 700 சிறப்பு தாய்சேய் நல மருத்துவ முகாம்கள் என மொத்தம் 1400 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,708
இதேபோல் தினகரன் அணியினரும் ஜெயலலிதாவின் பிறந்தநாளை மிகவும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



