Show all

தியோதர் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது தமிழகம்

தமிழகம், இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகள் மோதிய தியோதர் டிராபி தொடர் (50 ஓவர்) விசாகப்பட்டிணத்தில் நடைபெற்று வந்தது. லீக் சுற்றில் முதல் 2 இடங்களைப் பிடித்த இந்தியா பி, தமிழகம் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

ஒய்.எஸ்.ஆர் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் டாசில் வென்ற தமிழக அணி முதலில் பேட் செய்தது. தமிழக அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 303 ரன் குவித்தது. அதிகபட்சமாக அபாரமாக விளையாடிய தினேஷ் கார்த்திக் 126 ரன் குவித்தார். இந்திரஜித் 31, சாய் கிஷோர் 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா பி பந்துவீச்சில் தவால் குல்கர்னி 5 விக்கெட் கைப்பற்றினார். டிண்டா, மிலிந்த், அக்சர் பட்டேல், ஹர்பிரீத் சிங் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய இந்தியா பி அணி 46.1 ஓவரில் 261 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. குர்கீரத் சிங் அதிகபட்சமாக 64 ரன் எடுத்தார். தமிழக பந்துவீச்சில் ரகில் ஷா 3, முகமது, சாய் கிஷோர் தலா 2, விஜய் ஷங்கர், வாஷிங்டன் சுந்தர், முருகன் அஷ்வின் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 42 ரன் வித்தியாசத்தில்  தமிழகம் தியோதர் கோப்பையை வென்றது. தினேஷ் கார்த்திக் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.