3 போட்டிகள் முடிவில் இந்தியா- ஆஸ்திரேலியா தலா 1 போட்டிகளில் வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளன. மூன்றாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது. 4 வது போட்டி தர்மசாலாவில் நடைப்பெற்று வருகின்றது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தோள்பட்டை காயம் காரணமாக இந்திய அணி கேப்டன் விராட் கோலி இந்த போட்டியில் விளையாடவிலை. அவருக்கு பதிலாக ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டார். முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 88.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 300 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 118.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 332 ரன்கள் எடுத்து. பின்னர் 32 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 53.5 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணிக்கு 106 ரன்கள் வெற்றி இலக்காக்க நிர்ணயம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 6 ஓவர்களில் 19 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 13 ரன்களுடனும், முரளி விஜய் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வெற்றிக்கு வெறும் 87 ரன்கள் மட்டுமே தேவை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2 நாட்கள் ஆட்டம் மீதம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.