Show all

இலங்கைக்கு எதிரான T20 போட்டியிலும் வெற்றி பெற்று முழுமையாக தொடரை கைப்பற்றியது இந்தியா

கொழும்புவில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக முனிவீரா 53 ரன்களும், பிரியஞ்சன் 40 ரன்களும் எடுத்தனர்.  இந்திய அணி தரப்பில் சஹால் 3 விக்கெட்டுகளும் குல்தீப் யாதவ் 2  விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி, 19.2 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக கோலி 82 ரன்களும், மணீஸ் பாண்டே 51 ரன்களும் குவித்தனர். இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியை விளையாடியது. இந்த அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இலங்கை அணியை ஒயிட் வாஷ் செய்தது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.