கோவை வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள
112 அடி உயர ஆதியோகி சிவன் சிலையைப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 24ம் தேதி திறந்து
வைத்தார். அதன் பின்னர் ஈசா யோகா மையத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு அவர் பேசினார்.
விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடிக்கு ஆதியோகி படம் இடம்பெற்ற சால்வை ஒன்றினை சக்கி
வாசுதேவ் அளித்திருந்தார். விழா முழுவதும் பிரதமர் மோடி அந்த சால்வையை அணிந்திருந்தார்.
அந்த சால்வையைத் தனக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம், கீச்சகம் மூலம் டெல்லியைச்
சேர்ந்த சில்பி திவாரி என்ற பெண் கேட்டிருந்தார். இதையறிந்த பிரதமர் மோடி, சால்வையுடன்,
தனது கையெழுத்திட்ட மடலையும் சில்பி திவாரிக்கு அனுப்பியுள்ளார். பிரதமர் அனுப்பிய
சால்வை மற்றும் மடலின் புகைப்படங்களை சில்பி திவாரி கீச்சகத்தில் பதிவிட்டுள்ளார்.
தமது கோரிக்கைக்கு செவிசாய்த்து பிரதமர் மோடி, சால்வையை பரிசாக வழங்கியது மகிழ்ச்சியை
ஏற்படுத்தியுள்ளதாக சில்பி திவாரி கீச்சகப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



