Show all

இவான்கா ட்ரம்ப் அவர்களே! வருக, வருக! என வரவேற்கும் ஐந்தடுக்கு பாதுகாப்பில் ஹைதராபாத்

09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலகத் தொழில் முனைவோர் மாநாட்டுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவான்கா ட்ரம்ப் வருகையையொட்டி ஹைதராபாத் நகருக்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஹைதராபாத்தில் வருகிற செவ்வாய், புதன், வியாழன் மூன்று நாட்கள் ‘உலக தொழில்முனைவோர் மாநாடு நடைபெறவுள்ளது. பங்கேற்பதற்காக உலக அளவில் பல சர்வதேச தலைவர்களும் முன்னணி தொழில் முனைவோர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்தத் தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க பேராளர்கள் குழு ஒன்று ஹைதராபாத் வரவுள்ளது. இந்த அமெரிக்கப் பேராளர்கள் குழுவுக்கு தலைமையேற்று இந்தியா வரவுள்ளார் இவான்கா ட்ரம்ப்.

டொனால்ட் ட்ரம்ப்பின் மகளான இவான்கா சர்வதேச அளவில் நடைபெறும் பல வளர்ச்சி மாநாடுகளிலும் உலகத் தலைவர்கள் பங்கேற்கும் பல நிகழ்வுகளிலும் தன்னுடைய தொடர் பங்களிப்பை அளித்து வருகிறார்.

இவான்காவின் வருகையையொட்டி ஹைதராபாத் நகர் முழுவதும் அமெரிக்கப் பாதுகாப்புப் படையின் ஐந்து அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அடிக்கு இரண்டு கண்காணிப்புக் படக்கருவி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளூர் காவல்துறையினர், நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்கப் காவல்துறையினர் , ஆளில்லா கண்காணிப்பு விமானம் என உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வருகிற திங்கட்கிழமை நள்ளிரவு 1.45 மணிக்கு தனி விமானம் மூலம் ஹைதராபாத் வருகிறார் இவான்கா.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,617

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.