நாட்டில் அதிகமாக வை-பை இணையத்தள சேவையை பயன்படுத்திய தொடர்வண்டி நிலையமாக பீகார் மாநில தலைநகர் பாட்னா தொடர்வண்டி நிலையம் விளங்குகிறது. இதில் சர்ச்சைக்குரிய விஷயம் என்னவென்றால் அதிகமாக வை-பை பயனாளர்கள் ஆபாச இணையதளங்களே பார்த்து உள்ளனர் என்பதுதான். நாட்டில் இலவசமாக வை-பை இணையத்தளச் சேவை வழங்கப்படும் தொடர்வண்டி நிலையங்களில் பாட்னா தொடர்வண்டி நிலையம் அதிகமாக இணையதளம் பயன்படுத்தியோர் பட்டியலில் முதன்மையிடத்தில் உள்ளது. இணையதள தேடலில் முதன்மையிடத்தில் உள்ள பாட்னாவில், இலவச வை-பையை பயன்படுத்தியவர்கள் அதிகபேர் ஆபாச இணையதளங்களே தேடிஉள்ளனர் என்று ரெயில்டெல் அதிகாரி கூறிஉள்ளார். இலவச வை-பை பயனாளர்கள் தரவுகளில் (சர்வர்களில்) இருந்து இந்த தகவலானது வெளியாகி உள்ளது, என்று அதிகாரிகள் குறிப்பிட்டு உள்ளனர். கிழக்கு மத்திய ரெயில்வேயின் கீழ்வரும் பாட்னா தொடர்வண்டி நிலையம் பீகாரில் முதல் முறையாக வை-பை சேவை பெற்ற நிலையம் ஆகும். பாட்னா தொடர்வண்டி நிலையம் மிகவும் கூட்டம் நிறைந்த ரெயில் நிலையங்களில் ஒன்றாகும், மிகவும் பழமை வாய்ந்த தொடர்வண்டி நிலையம். பாட்னா தொடர்வண்டி நிலையத்திற்கு நாள் ஒன்றிற்கு 200-க்கும் மேற்பட்ட தொடர்வண்டிகள் வந்து செல்கின்றன. ரெயில்டெல் தகவலின்படி, பயனாளர்கள் பாட்னா தொடர்வண்டி நிலையத்தில் யூடியூப்-பையே அதிகமாக பார்த்து உள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக விக்கிப்பீடியா உள்ளது. அனைத்தையும் விட ஆபாச இணையதளங்களே அதிகமாக பார்க்கப்பட்டு உள்ளன. பதிவிறக்கம் செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் சிலர் வை-பை சேவையை இணைய ஆப்ளிகேஷன்கள், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களை பதிவிறக்கம் செய்து உள்ளனர். பாட்னாவை அடுத்து அதிகமாக இலவச வை-பை சேவையால் பயன்பெறும் தொடர்வண்டி நிலையமாக ஜெய்பூர் தொடர்வண்டி நிலையம் உள்ளது. இதனையடுத்து அடுத்தடுத்த இடங்களை பெங்களூருவும், டெல்லியும் பிடிக்கின்றன. இப்போது பாட்னா ரெயில் நிலையத்திற்கு ரெயில்டெல் ஒரு ஜிகாபைட் அளவிலான வை-பை சேவையை வழங்குகிறது. பயனாளர்கள் மற்றும் இளைஞர்கள் தினமும் இணையத்தளத்தைப் பயன்படுத்தும் காரணத்தினால் அதனுடைய வேகம் குறைந்து உள்ளது, எனவே வை-பை சேவையை 10 ஜிகா பைட்டாக உயர்த்த திட்டமிட்டு உள்ளது ரெயில்டெல். பாட்னா தொடர்வண்டி நிலையத்தில் கடந்த மாதம் வை-பை சேவை தொடங்கப்பட்டது. அதனுடன் விசாகப்பட்டிணம், ராஞ்சி மற்றும் மும்பை சென்ட்ரல் ரெயில் நிலையங்களில் முதல்முறையாக இலவச வை-பை சேவை தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்தியாவில் 400 தொடர்வண்டி நிலையங்களில், அதிவேக வை-பை இணைய இணைப்பினை வழங்கும் திட்டத்தில் கூகுள் இந்தியா மற்றும் இந்தியன் தொடர்வண்டிதுறை இணைந்தது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



