Show all

விஜய் சேதுபதி! உழவர்களின் இன்றைய நிலையை மையமாக வைத்து உருவாகி வரும் படம், கடைசி விவசாயி

18,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தேசிய விருது பெற்ற காக்கா முட்டை படத்தைத் தந்து தமிழக மக்களின் நெஞ்சில் இடம்பிடித்தவர் இயக்குநர் மணிகண்டன்.

மணிகண்டன் தற்போது 'குற்றமே தண்டனை', 'ஆண்டவன் கட்டளை' ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இப்படங்களை தொடர்ந்து தற்போது 'கடைசி விவசாயி' என்ற புதிய படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் அவர். 

சமூக அக்கறையின் அடிப்படையில் கதை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு நகைச்சுவை, காதல் என பல சிறப்பம்சங்களையும் சேர்த்து உருவாக்க உள்ளனராம்.

இப்படத்தை ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் இதற்கான படபிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.

நாட்டுக்கே சோறும் போடும் உழவனுடைய தற்போதைய நிலையை எடுத்துக்காட்டுவதாக இந்தப் படம் இருக்கும் என்று இயக்குநர் மணிகண்டன் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

நடிகர் விஜய் சேதுபதி, ஆண்டவன் கட்டளை படத்தை அடுத்து மணிகண்டன் இயக்கத்தில், கடைசி விவசாயி என்ற இந்தப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,774.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.