வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்ட ஆத்திகர்கள் மற்றும் நாத்திகர்கள் இருவருக்கும் ஏன் கடவுளின் ஆதாரம் இல்லை? என்ற கேள்விக்கு அந்தக் களத்தில் நான் அளித்திருந்த விடையே இந்தக் கட்டுரை. 19,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழர்களுக்கு இந்த மாதிரியான சிக்கல் இல்லவேயில்லை. சமூதாயத் தொடர்புக்கருவியான தமிழ்மொழிக்கு சங்கம் வைத்து கூட்டுச்சிந்தனையில் நிறுவப்பட்டுள்ள மொழிக்கான இலக்கணமும் உண்டு; வாழ்க்கைக்கான இலக்கணமும் உண்டு. நாம் நம் தமிழ் முன்னோரின் தோளில் அமர்ந்து அவைகளை மேலும் செலுமைப்படுத்தவற்கு, தம்மின் தம்மக்கள் அறிவுடைமையைக் கொண்டாடுகிற இனம் தமிழ்இனம். உலக இனங்கள் தனிமனிதச் சான்றோர் சிந்தித்து முன்னெடுத்த மதங்களில் இயங்குவன. அதை பின் தொடரலாமேயன்றி மாற்றிச் சிந்திக்கவோ திருத்தம் செய்யவோ முடியாது. இந்தக் கேள்வியில் மதங்கள் சுட்டும் மூலமுதல் படைப்பாளியை, நீங்கள் கடவுள் என்ற பொருள் பொதிந்த தமிழ்ச்சொல்லால் குறிப்பிட்டு உள்ளீர்கள். கடவுள் என்ற சொல் இந்த வகைக்குப் பொருந்தாது.
அதனால் அதில் மாறுபட்டவர்கள் தோன்றும் போது அத்திகம் நாத்திகம் என்ற பிரிவுகள் எழுகின்றன. ஒவ்வொரு மதங்களும் ஒரு மூலமுதல் படைப்பாளியை முன்மொழிகின்றன. ஆனால் படைப்புக் கோட்பாடு நிறுவப்படமுடியாமல் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டே வருகிறது. அதனால் அந்த மதம் சுட்டுகிற படைப்பாளி குறித்து ஆத்திகர்கள் நாத்திகர்கள் இருவரிடமும் ஆதாரம் இல்லாநிலை தொடர்கிறது. http://www.news.mowval.in/Editorial/katturai/How-213.html
தமிழ்முன்னோர் தொகுத்த வாழ்விலக்கணமான பொருள் இலக்கணத்தின் அகன்ஐந்திணையில் குறிஞ்சித்திணையில் கருப்பொருளாக குறிப்பிடப்படுகிற
1 தெய்வம் - சேயோன்
2 தலைமக்கள் - வெற்பன், கொடிச்சி
3 மக்கள் - குறவர், குறத்தியர்
4 பறவை - கிளி, மயில்
5 விலங்கு - புலி, யானை
6 ஊர் - சிறுகுடி
7 நீர்நிலை - அருவி, சுனை
8 பூ - வேங்கை, குறிஞ்சி
9 மரம் - தேக்கு, அகில்
10 உணவு - மலைநெல், தினை
11 பறை - தொண்டகம்
12 யாழ் - குறிஞ்சி யாழ்
13 பண் - குறிஞ்சிப் பண்
14 தொழில் - தேன் எடுத்தல், வெறியாடல்
என்ற பதினான்கு தலைப்புகளில் முதன்மையாகச் சுட்டப்பட்டிருக்கிற தெய்வம் சேயோன்தான் கடவுள்.
ஆற்றல்கள் தொய்ந்திருக்கிற தமிழர் தெய்வங்களுக்கான அடிப்படைகள் கடவுளும் இறையும். ஆக கடவுள் இறை தெய்வம் ஆகிய மூன்று தமிழ்ச்சொற்களும் பொருள் பொதிந்த வரையரைகளைக் கொண்டுள்ளன. தமிழர்கள் கடவுளையும் இறையையும் ஆற்றல் மூலங்களாகத் தெரிவிக்கின்றனர். அந்த ஆற்றல் மூலங்கள் தொய்ந்த- வாழ்ந்த சான்றோர் பெருமக்களை திருமணத்திற்கு முன்னால் வணங்கும் வீட்டு தெய்வம், ஆண்டுக்கொருமுறையும், வீட்டின் சிறப்பு நிகழ்வுகளின் போதும் வணங்கும் குலதெய்வம், ஊரே கூடி கொண்டாடும் காவல்தெய்வம், எல்லைதெய்வம், ஆகிய மறுக்க வேண்டிய தேவை எதுவும் இல்லாத வரலாறுகளும், ஆற்றல்களுமே தமிழர் தெய்வங்கள் கடவுள் இறை என்பன. கடவுள் எவ்வாறான ஆற்றல் என்பது குறித்து விரிவான தகவல்களை இந்த இணைப்பில் காணலாம். http://www.news.mowval.in/Editorial/katturai/Kadavul-144.html -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,70,996.