Show all

அடிக்கடி இந்திய எல்லைக்குள் அத்துமீறும் சீனச்சேனை! மூலிகை பறிக்கவாம்

சீன வீரர்கள் அடிக்கடி இந்திய எல்லைக்குள் அத்துமீறுவதற்கான காரணத்தை- தங்கத்தை விட அதிகவிலைக்குப் போகும் இமயப்பூஞ்சையை பறிப்பதற்கே என்கிறது, இந்தோ - பசிபிக் தகவல் தொடர்பு மையம், 

13,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: சீனாவில் இமயப்பூஞ்சை தங்கத்தை விட விலை மதிப்பு மிக்கவை. இது இமய மலைப் பகுதிகளிலும், தென்மேற்கு சீனாவின் கிங்காய் - திபெத் பகுதிகளிலும் அதிகளவில் காணப்படுகிறது. இந்தப் பூஞ்சை சிறுநீரக கோளாறு முதல் ஆண்மைக் குறைவு வரை அனைத்தையும் குணப்படுத்துவதாக நம்பிக்கை நிலவுகிறது.

இந்தியச் சீன வீரர்களுக்கு இடையில் அடிக்கடி மோதல்கள் நடைபெறும் நிகழ்வுகளைக் குறித்து கேள்விப் பட்டிருப்போம். இந்த மோதல் சம்பவங்கள் எல்லைப் பகுதியை ஆக்கிரமிப்பு செய்வதில் இருந்து தடுக்க நடைபெறும். ஆனால் பல முறை சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதற்கான காரணம், மருத்துவ குணம் நிறைந்த இமயப்பூஞ்சையை (கார்டிசெப்ஸை) எடுத்துச் செல்வதற்காக என இந்தோ - பசிபிக் தகவல்தொடர்பு மையம் தெரிவித்துள்ளது. 

இமயப்பூஞ்சை என்பது கம்பளிப்பூச்சி பூஞ்சை அல்லது இமாலய தங்கம் என்று அழைக்கப்படுகிறது. இதன் வித்துகள் பூச்சிகளைப் பாதித்துக் கொல்லும். இறந்த பூச்சிகளின் சதையில் இருந்து இமயப்பூஞ்சை முளைக்கும். இதிலுள்ள உயிரிவினை மூலக்கூறு சிறந்த  சிகிச்சை ஆற்றலைக் கொண்டுள்ளதால், என்றேனும் ஒரு நாள் புற்றுநோய் எதிர்ப்பு சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  

இது குறித்து இந்தோ - பசிபிக் தகவல் தொடர்பு மையம் தெரிவித்துள்ள அறிக்கையில், சீனாவில் இவை தங்கத்தை விட விலை மதிப்பு மிக்கவை. இது இமயப் பகுதிகளிலும், தென்மேற்கு சீனாவின் கிங்காய் - திபெத் பகுதிகளிலும் அதிகளவில் காணப்படுகிறது. உலகளவில் இந்த இமயப்பூஞ்சையின் மதிப்பு 1072.50 மில்லியன் டாலர். எனவே இமயப்பூஞ்சையை சீனா அதிகளவில் சேகரித்து, ஏற்றுமதி செய்கிறது. 

கடந்த பத்தாண்டுகளில் இமயப்பூஞ்சையின் தேவை அதிகரித்து இருக்கிறது. சீனாவின் நடுத்தர வர்க்கத்தில் இந்த பூஞ்சை சிறுநீரக கோளாறு முதல் ஆண்மைக் குறைவு வரை அனைத்தையும் குணப்படுத்துவதாக நம்பிக்கை நிலவுகிறது. ஆனால் இதற்கு இயல்அறிவு (சயின்ஸ்) பாடான சான்றுகள் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இமயமலையில் உள்ள சில நகரங்களில் இந்தப் பூஞ்சையைச் சேகரித்து விற்பனை செய்து வாழ்ந்து வருகின்றனர். இதுவே இவர்களின் வாழ்வாதாரம். திபெத்திய பீடபூமி மற்றும் இமயமலையில் உள்ள குடும்ப வருமானத்தில் 80 விழுக்காடு வரை கம்பிளிபூச்சி பூஞ்சை விற்பதன் மூலம் கிடைக்கிறது என வல்லுனர்கள் கூறியுள்ளனர். 

இதை ஆய்வகத்தில் செழுமையாக வளர்க்க முடியாது, இவை காடுகளில் மட்டுமே அரிதாக காணப்படும். ஆனால் சுங்புக் தேசிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மி கியோங் லீ, முனைவர் அய்மன் துர்க் மற்றும் அவர்களது குழுவினர், பூஞ்சைகளை அதன் வீரியம் குறையாமல் இங்குள்ள சூழலில் வளர்ப்பதற்கான வழியைக் கண்டுபிடித்துள்ளோம். என்று தெரிவித்துள்ளனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,476.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.