Show all

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு! இங்கிலாந்தின் 'தி கார்டியன்' செய்தி ஒன்றை வெளியிட்டு சர்வதேச அளவில் பிரபலமாக்கியது

11,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சர்வதேச அளவில் கவனத்தை பெற்றது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.

தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் மீது காவல்துறையினர் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டுக்கு உலகம் முழுவதும் கண்டனம் வலுத்து வரும் நிலையில் இங்கிலாந்தின் தி கார்டியன் இதழில்; இதுகுறித்து செய்தி வெளியாகியுள்ளது. தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பொதுமக்கள் மீது காவல்துறையினர் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

காவல்துறையினரின் இந்த சட்ட விரோதப் போக்கைக் கண்டித்தும், இந்த கொடூர சம்பவத்திற்கு உத்தரவிட்ட அதிகாரிகளை எதிர்த்தும் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இந்த நிலையில் இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் பிரபல நாளிதழான தி கார்டியன்' தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தி கார்டியன் இதழில் வெளியான செய்தி, சர்வதேச அளவில் தூத்துக்குடியின் கவனத்தை பெற்றுள்ளது. துப்பாக்கிச்சூடு குறித்து தி கார்டியன் நாளிதழில் வெளியான செய்தியை படிக்க: https://www.theguardian.com/world/2018/may/23/police-in-south-india-accused-of-mass-after-shooting-dead-protesters 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,798.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.