Show all

இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் ஒரு தமிழச்சி

01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அட்சயா சண்முகம் என்ற 29அகவை சென்னை பெண், பிரபல போர்ப்ஸ் இதழின் 30 அகவைக்கு உட்பட்ட 30 இளம் கண்டுபிடிப்பாளர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

புகைப் பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான மென்பொருளை உருவாக்கியதற்காக தான் அட்சயாவிற்கு இந்த கவுரவம் வழங்கப்பட்டுள்ளது. கைக்கடிகார வடிவில் இந்த மென்பொருள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புகைப்பிடிப்பவர்கள் தங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், புகைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் போது புகைபிடிக்கக் கூடாது என்ற அறிவுறுத்தலையும் தருகிறது.

இதன் மூலம் புகை பழக்கத்திற்கு அடிமையானர்கள் தங்களுக்கு ஏன், எப்போது, எந்த விதமான சூழலில் புகைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம் என கூறும் அட்சயா, தனது இந்த கண்டுபிடிப்பை அடுத்த ஆண்டில் சந்தைப்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலையில் மின்னியல்துறையில் பொறிஞராகப் பட்டம் பெற்றுள்ள அட்சயா, 30 அகவைக்கு உட்பட்ட 30 பேர் கொண்ட போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,609

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.