21,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்றிரவு இலங்கை பாராளுமன்றம் கலைக்கப் படலாம் என்ற தகவலை, கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய, ரணில் விக்கிரம சிங்கேவின், ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பீ பெரேரா வெளியிட்டார். இலங்கையில் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்து வரும் சூழலில் அந்நாட்டின் நாடாளுமன்றத்தை இன்றிரவு கலைக்க திட்டமிட்டு உள்ளதாக, நாடாளுமன்றம் சென்றபோது, இந்த தகவல் தமக்கு கிடைத்தாக அவர் கூறினார். ஐக்கிய தேசிய கட்சியின் அஜீத் பீ பெரேரா வெளியிட்ட இந்த தகவல் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,964.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.