Show all

ராஜபக்சே ஆட்சி மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்கள்: இலங்கை அரசு

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்;சே ஆட்சியில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது தமிழர்கள் கொத்துகொத்தாய் கொல்லப்பட்டனர். மனித உரிமை அப்பட்டமாக மீறப்பட்டது. சர்வதேச அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ராஜபக்சேவின் 10 ஆண்டு ஆட்சி காலத்தில் நடைபெற்ற ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக வலுவான ஆதாரங்கள் இருப்பதாக இலங்கை சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறியுள்ளார்.

குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்துள்ள அவர் இதில் தொடர்புடையவர்களுக்கு எதிரான விசாரணை நிறைவடையும் நிலையில் இருப்பதாக கூறியிருக்கிறார். தவறு செய்தவர்கள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றார் அவர். அதிபர் சிறிசேனா பொறுப்பெற்றதும் மஹிந்த ராஜபக்சே ஆட்சியின் போது நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்க உத்தரவிட்டதுடன் இதற்கான சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.