Show all

இலங்கையிலும் போராட்டம்! ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்க பட்ட தமிழக மக்களுக்கு ஆதரவாக

11,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராடிய மக்கள் காவல் துறையினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இலங்கையின் கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிளிநொச்சயில் உள்ள கந்தசுவாமி கோவில் முற்றத்தில் இப்போரட்டம் கடைபிடிக்கப் பட்டது. இந்திய அரசின் செயற்பாடுகளை கண்டித்த முழக்கங்கள் உள்ளடக்கிய பதாகைகளை தாங்கியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தின் செயல்பாட்டு உறுப்பினர் லீலாதேவி ஆனந்த நடராஜா கருத்து தெரிவிக்கையில், 'காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆகிய நாங்கள், 462 நாட்களாக தொடர்சியாக போராடிக் கொண்டிருக்கின்றோம் எம்மை போல அறவழியில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி போராடிய 13 அப்பாவி தமிழ் மக்கள் இந்திய நடுவண் அரசின் கை கூலிகளால் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இச்சம்பவம் உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்கள் நடுவே அச்சத்தை ஏற்படுத்துகின்றது என்று கூறினார். மேலும்

இலங்கையில் இனப்படுகொலை நடந்து, நாம் ஒன்றரை லட்சம் உறவுகளை இழந்தோம் பதினாறாயிரம் பேர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்கள் இந்தியாவில் நடந்த இச்சம்பவத்தை கேட்டு எங்கள் இதயம் துடிக்கின்றது. கொல்லப்பட்ட குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அவர்களின் ஆத்மா சாந்திக்காக இறைவனை பிரார்த்திக்கின்றோம்.'

இலங்கையில் தமிழ் மக்களை இரண்டாம் குடிகளாகப் பார்ப்பது போல் மோடி அரசும் தமிழ் மக்களை இரண்டாம் தர குடிகளாகப் பாராமல், தமிழ் மக்களையும் தமது சொந்த மக்களாக கவனித்து அவர்களது வாழ்வுரிமையை கொடுக்கவேண்டும் அவர்களது அறவழிப் போராட்டத்துக்கு மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்யவேண்டும்' என்றார் லீலாதேவி ஆனந்த நடராஜா. இலங்கையில் வலிந்து காணமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் 462வது நாளாக தொடர்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,798. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.