Show all

சமூக வலைதளங்களில் பெருமிதத்தோடு பகிரப்படும் பிரிட்டன் தலைமை அமைச்சரின் பொங்கல் வாழ்த்து

01,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழர் திருநாளான பொங்கல் விழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் இதையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பிரிட்டன் தலைமை அமைச்சர் தெரசா மே தெரிவித்துள்ள வாழ்த்து அனைவரையும் கவர்ந்துள்ளது.

தெரசா மே தன் கீச்சு பக்கத்தில் பொங்கல் வாழ்த்து சொல்லும் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த காணொளியில், அவர் பேச தொடங்கும் முன்பு தமிழில் ‘வணக்கம் சொல்கிறார். பிரிட்டனில் மற்றும் உலகமெங்கும் வசிக்கும் தமிழர்களுக்கு அவர் தன் வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, அவர்களின் பிரிட்டனின் வளர்ச்சிக்கு மிகுந்தப் பங்காற்றியுள்ளனர் என்றும் புகழ்ந்துள்ளார். தமிழர்களால் தாங்கள் பெருமிதப்படுவதாகவும் வரும் ஆண்டு அவர்களுக்குச் சிறப்பாக அமையட்டும் என்றும் தெரசா மே தன் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடுகிறார்.

பொங்கல் விழாவிற்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவிப்பது நமக்கு பெருமையான விசயமாகும்; இது நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் வெளிநாட்டவர்கள் எவ்வளவு உயர்வாகப் புரிந்து வைத்துள்ளனர் என்பதை உணர்த்துகிறது. தெரசா மேயின் பொங்கல் வாழ்த்து காணொளி சமூக வலைத்தளங்களில் பெருமிதத்தோடு பகிரப்பட்டு வருகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,667

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.