Show all

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு மூவருக்கு!

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

25,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: முன்னதாக கடந்த சில நாட்களாக மருத்துவம், இயற்பியல், வேதியியல், இதழியல், இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளுக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. இந்த வரிசையில் இன்று பொருளாதாரத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடப்பு ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கார்டு, ஜோஸ்வா ஆங்கிரிஸ்ட், கெய்டோ இம்பென்ஸ் ஆகிய 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பரிசு தொடர்பான அறிவிப்பை ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் ராயல் சுவீடிஷ் அகாடமி நோபல் பரிசு தேர்வுக்குழு அறிவித்திருக்கிறது. அந்த அறிவிப்பின்படி, டேவிட் கார்டுக்கு ஒரு விருது முழுவதுமாகவும், ஜோஸ்வா ஆங்கிரிஸ்ட் - கெய்டோ இம்பென்சுக்கு இணைந்து ஒரு விருதும் அளிக்கப்படுவதாக தெரிகிறது. 

தொழிலாளர் தொடர்பான பொருளாதாரத்தில் அளித்த பங்களிப்பிற்காக டேவிட் கார்டுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது. 

ஜோஸ்வா ஆங்கிரிஸ்ட் மற்றும் கெய்டோ இம்பென்சுக்கு காரண உறவுகள் குறித்து செய்த பகுப்பாய்விற்காக நோபல் பரிசு வழங்கப் படுகிறது. இவர்களால் உருவாக்கப்பட்ட கட்டமைப்பானது கவனிப்பு தரவுகளுடன் பணிபுரியும் ஆராய்ச்சியாளர்களால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
 -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,033.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.