Show all

மாலைத்தீவுக்கு தப்பியோடியுள்ளார்! இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலைத்தீவு தப்பிச்சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தனது குடும்பத்தினருடன் மாலைத்தீவு தப்பிச்சென்றுள்ளார்.

29,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: இலங்கை அதிபர் மாளிகை, போராட்ட முறையில், கடந்த ஐந்து நாட்களாக மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதிபர் மாளிகைக்குள் போராடும் மக்கள் வருவதற்கு முன்பே அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து வெளியேறினார். 

கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு தப்பி விட்டதாக தகவல் வெளியானது. ஆனால், கோத்தபய இலங்கையில்தான் இருப்பதாக பேரவைத்தலைவர் தெரிவித்தார். இதனிடையே, அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று பதவி விலகப்போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பிச்சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விமானப்படை விமானம் மூலம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலைத்தீவு தப்பிச்சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தனது குடும்பத்தினருடன் மாலைத்தீவு தப்பிச்சென்றுள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,308.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.