Show all

இலங்கையில் ஊடகங்களுக்கு விடுதலை

இலங்கையில் ராஜபட்சே அதிபராக இருந்தபோது ஊடகங்கள் மீது கடும் கட்டுப்பாடுகளை விதித்தார். அந்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் புதிய அதிபராக சிறீசேனா பதவியேற்றதும், செய்தியாளர்களைச் சிறையில் அடைக்கவோ, அபராதம் விதிக்கவோ அரசுக்கு அதிகாரம் வழங்கும் ஊடக ஒழுங்குமுறைக் குழுவை அதிரடியாகக் கலைத்து உத்தரவிட்டார். மேலும், ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகளையும் நீக்கினார்.இந்நிலையில், ஊடக ஒழுங்குமுறைக் குழுவை இலங்கை அரசு மீண்டும் அமைத்து, அதற்கு புதிய உறுப்பினர்களை சிறீசேனா கடந்த வாரம் நியமித்தார். ஊடக ஒழுங்குமுறைக் குழு மீண்டும் அமைக்கப்பட்டிருப்பது குறித்து சர்வதேச செய்தியாளர் சுதந்திரம் தொடர்பான அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.