Show all

பெற்றோர் நினைவைக் கொண்டாட சிலையெடுத்து அசத்தல்!

தாய் தந்தையர் இருவருக்கும் சிலை வடித்து, விழா எடுத்து, ஊராரின் பாராட்டு பெற்றுள்ளார், திருப்பூர் மாவட்டம் உடுமலை தீபாலபட்டியை சேர்ந்த இரமேஷ்.

16,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: திருப்பூர் மாவட்டம்  உடுமலை தீபாலபட்டியை சேர்ந்தவர் இரமேஷ். இவருடைய தந்தை உழவர் மாரிமுத்து. தாய் பாக்கியம். இவர்கள் இருவரும் இறந்து பத்து ஆண்டுகள் ஆகிறது. இந் நிலையில் தாய் தந்தையர் இருவருக்கும் சிலை வடித்து விழா எடுத்து ஊராரின் பாராட்டு பெற்றுள்ளார் இவர்.

விழாவில் சிறப்பு பூசைகள் முன்னெடுத்து தீபாலபட்டி ஊர் மக்களை அழைத்து கெடா விருந்து வைத்துள்ளார். தாய் தந்தையருக்கு விழா எடுத்து கெடா வெட்டு நடத்தி சுற்று வட்டார மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார் இரமேஷ். இந்த செய்தி புலனத்தில் தீயாகப் பரவி வருகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,114.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.