Show all

முதல் முறையாக வேளாண்மைக்குத் தனி வரவுசெலவுத் திட்டம்! வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களுக்கு காணிக்கையாக்கப்பட்டு

தமிழ்நாட்டு வரலாற்றிலேயே முதல் முறையாக வேளாண்மைக்கு என தனி வரவுசெலவுத் திட்டம் பதிகை செய்யப்பட்டுள்ளது. இந்த வேளாண் வரவுசெலவுத்திட்டம்- வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களுக்கு காணிக்கையாக்கப்பட்டுள்ளது. 

29,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்களுக்கு வேளாண் வரவுசெலவுத் திட்டத்தைக் காணிக்கையாக்குகிறேன் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வேளாண் வரவுசெலவுத்திட்டப் பதிகையைத் தொடக்கினார். 

தமிழ்நாட்டு வரலாற்றிலேயே முதல் முறையாக வேளாண்மைக்கு என தனி வரவுசெலவுத் திட்டம் பதிகை செய்யப்பட்டுள்ளது. இந்த வேளாண் வரவுசெலவுத்திட்டம் 273 பக்கங்கள் கொண்டுள்ளது.

அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்- பன்னாட்டு நிபுணர்களின் கருத்தை கேட்டு வேளாண் வரவுசெலவுத் திட்டத்தைத் தயாரித்துள்ளதாகத் தெரிவித்தார்.

தமிழக வேளாண் வரவுசெலவுத் திட்டத்தின் முதன்மை அம்சங்கள்:
அ. தமிழ்நாட்டில் வேளாண்மை நடைபெறும் பரப்பளவு 11.07 லட்சம் ஹெக்டேர் கூடுதலாக்கப்படும்

ஆ. இருபோக சாகுபடி நடைபெறும் பரப்பை 10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்துவதற்கான நடவடிக்கை கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் என்ற தலைப்பில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்

இ. கால்வாய், பாசன நீர்வழித் தடங்களை தூர்வாரும் திட்டம் ரூ.250 கோடி செலவில் பயன்படுத்தப்படும். 

ஈ. தமிழ்நாட்டில் பனைமர வளர்ப்பை அதிகரிக்க 30 மாவட்டங்களில் புதிய திட்டம்

உ. நெல் ஜெயராமன் சேகரித்த மரபுசார் நெல் வகைகள் பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்படும்; தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் வகைகள் 200 ஏக்கர் பரப்பளவில் உற்பத்தி செய்து வழங்கப்படும்

ஊ. 76 லட்சம் பனை விதைகள், ஒரு லட்சம் பனைமரக் கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்

எ. பனைவெல்லம் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் நியாய விலைக்கடைகளில் கருப்பட்டி விற்பனை செய்யப்படும்.

ஏ. இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்கும் திட்டம் ரூ.2.68 கோடியில் ஒன்றிய - மாநில நிதியில் செயல்படுத்தப்படும்

ஐ. வேளாண்மையின் உன்னதத்தைத் தெரிந்துகொள்ளும் வகையில் மாநில அளவில் மரபுசார்பு வேளாண்மைக்கான அருங்காட்சியம் அமைக்கப்படும்

ஒ. பழப்பயிர் சாகுபடி பரப்பை அதிகரிக்க 80 லட்சம் பல்வகைச் செடிகள் தோட்டக்கலை பண்ணைகள் மூலம் உழவர்களுக்கு வழங்கப்படும்

ஓ. கரும்பு உழவர்களுக்கான ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.42.50 வழங்கப்படும்

ஓள. மழை நீர் சேகரிப்பு அமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் பாசன பரப்பை வலுப்படுத்துதல்

க. சிறு குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து கூட்டு பண்ணை முறையை ஊக்குவித்தல்

ங. பயிறு வகை விலையை கட்டுப்படுத்த, பயிறு உழவர்களை காப்பாற்ற ரூ.45.97 கோடி ஒதுக்கீடு

ச. அரசு விதைப் பண்ணைகள் மூலம் ரூ25 லட்சம் செலவில் நெல் விதைகள் உற்பத்தி 

ஞ. கலைஞர் கொண்டு வந்த உழவர் சந்தை திட்டத்திற்கு புத்துயிர் அளிக்க நடவடிக்கை 

ட. கடலூரில் பலா சிறப்பு மையம் அமைக்கப்படும்.

ண. ஞாயிறு சக்தி மூலம் இயங்கும் நீரேற்;றிகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் 10 குதிரைத்திறன் வரையிலான 5000 நீரேற்றிகளுக்கு  70விழுக்காடு  மானியத்தில் நிறுவப்படும். இந்த திட்டத்திற்கான செலவு  ரூ.114 கோடியே 68 லட்சம் என்பதான சிறப்பு அம்சங்கள் இந்த வேளாண் வரவுசெலவுத் திட்டத்தில் அறிக்கையிடப்பட்டுள்ளன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.