Show all

முதல்வர் குறித்து பொல்லாங்கு! வலையொளி காட்சிமடையாளர் கிசோர்.கே.சாமி கைது

வலையொளி காட்சிமடையாளர் கிசோர்.கே.சாமி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து பொல்லாங்கு பதிவிட்ட முன்னெடுப்பில், காவல்துறை தேடலில் தலைமறைவாகி வந்திருந்த நிலையில், புதுச்சேரியில் வைத்து ஒன்றியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

05,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: தீவிர பாஜக ஆதரவாளரும், வலையொளி காட்சிமடையாளரும் ஆன கிசோர்.கே.சாமியை, புதுச்சேரியில் வைத்து ஒன்றியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

மழை பாதிப்பு இடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்ட ஆய்வு தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்த கிசோர்.கே.சாமி, பொல்லாங்கு கருத்து பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக சென்னை ஒன்றியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர். 

இதனிடையே அவர் புதுச்சேரியில் பதுங்கியிருப்பதாக ஒன்றியக் குற்றப்பிரிவு காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அங்கு விரைந்த காவல்துறையிர், கிசோர்.கே.சாமியை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். அவரிடம் சுழியம் குற்றவியல் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்பே அவர் மீது மூன்று வழக்குகள் உள்ள நிலையில், இந்த புதிய வழக்கில் கிசோர்.கே.சாமியின் முன்பிணை மனுவை சென்னை முதன்மை அமர்வு அறங்கூற்றுமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,439.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.