Show all

வேல்முருகன் வழிகாட்டல்படி விமானங்கள் தயார் செய்யப்படுமா? நீட் தேர்வு வெளிமாநிலங்களில் சென்று எழுத

21,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அண்ணாநகரில் உள்ள நடுவண் இடைநிலை கல்வி வாரிய அலுவலகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மூன்று மணி நேரமாக நடுவண் இடைநிலை கல்வி வாரிய நிருவாக குளறுபடிகளை ஒழுங்கு படுத்த நெருக்கடிப்பில் ஈடுபட்டுள்ளார். 

மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் போதுமான நீட் தேர்வுக்கான மையங்கள் அமைக்காமல், தான்தோன்றித் தனமாக தமிழகத்தில் பெரும்பாலான மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கிய, முறையற்ற நிருவாகத்தை முறைப்படுத்தும் முகமாக, மாணவர்களை விமானம் மூலம் அழைத்து செல்ல நடுவண் இடைநிலை கல்வி வாரிய நிர்வாகமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேல்முருகன் மூன்று மணி நேரமாக நெருக்கடி கொடுத்து வருகிறார். தமிழகத்தில் போதுமான நீட் தேர்வு மையங்கள் அமைக்கும் வரை தேர்வு தள்ளி வைக்கப் படுமா? அல்லது வேல்முருகன் வழிகாட்டல்படி விமானங்கள் தயார் செய்யப்படுமா? மக்கள் ஆர்வத்தடன் தகவலுக்காக காத்திருக்கிறார்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,777.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.