Show all

வீரமணி அளித்த விடை! விநாயகர் ஊர்வலத்துக்குத் தடை விதித்தால், திமுக ஆட்சியையே இல்லாமல் செய்துவிடுவாரா அண்ணாமலை

பாஜக தமிழ்நாடு கிளையின் தவைர்கள் பேச்சு குறித்து கேட்ட கேள்விக்கு, ஒன்றிய அரசையும், அதை நடைமுறைப்படுத்திய பாஜக ஆளும் வடமாநில அரசுகளையும் கலைத்து விட்டு பிறகு தமிழ்நாடு பக்கம் வரட்டுமே என்றார் வீரமணி

21,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: முந்தாநாள் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஒரு பேட்டி தந்திருந்தார். அதில் விநாயகர் ஊர்வலத்துக்கு தடை விதித்தால், திமுக ஆட்சியையே இல்லாமல் செய்துவிடுவோம் என்று அண்ணாமலை கூறியது பற்றி கருத்து கேட்கப்பட்டது. 

அதற்கு விடைஅளித்த திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள், தமிழ்நாட்டில் பாஜக பெற்ற 4 இடங்களையும் இல்லாமல் செய்து விடும் என்றார். 

தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதிக்காத திமுக அரசை கலைக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்களே என்ற கேள்விக்கு 

விடைஅளித்த திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, முதலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டாம் என்று சொன்னது ஒன்றிய அரசுதான். அதனால் ஒன்றிய அரசையும், அதை நடைமுறைப்படுத்திய பாஜக ஆளும் வடமாநில அரசுகளையும் கலைத்து விட்டு பிறகு தமிழ்நாடு பக்கம் வரட்டுமே. என்று கூறியிருந்தார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,70,998.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.