Show all

கொரோனா ஒமிக்ரான் நிலவரம் இன்று! தமிழ்நாட்டில்

தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது நலங்குத்துறை வெளியிட்ட தகவல். 

19,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் இன்று 1,728 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 876 பேர்களுக்கு புதிய பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் 662 பேர்கள் குணமடைந்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 27,52,856. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,65,306 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27,05,034.

இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 18 பேர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 75,44,990 பேர்கள் வந்துள்ளனர்.

சென்னையில் 876 பேர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 852 பேர்களுக்;கு தொற்று உள்ளது.

தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 252 தனியார் ஆய்வகங்கள் என 321 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் நோயாளிகள் எண்ணிக்கை குறித்து இன்று பொது நலங்குத்துறை வெளியிட்ட அறிவிப்பு:-
தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 10,364.
மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 5,68,12,969.
இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,02,898.
மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 27,52,856.
இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,728 .
சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 876.
சென்னையில் இன்று சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட): 4259
மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 16,06,848. பெண்கள் 11,45,970. மூன்றாம் பாலினத்தவர் 38.
தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 1,012 பேர். பெண்கள் 716 பேர்கள்.
இன்று குணமானவர்கள் 611 பேர்கள். மொத்தம் குணமானவர்கள் 27,05,696 பேர்கள்.
இன்று கொரோனா குறுவித் (வைரஸ்) தொற்றினால் 6 பேர் உயிரிழந்தனர். அதில் ஒருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர். மற்ற ஐவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36,796 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 8656 பேர்கள் உயிரிழந்துள்ளனர்.

முதன்மைச்சிக்கலாக மூச்சுச் சிக்கல், மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிகளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. இன்று உயிரிழந்தவர்களில் 6 பேர்கள் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களாவர். எவ்வித பாதிப்பும் இல்லாதவர் யாருமில்லை.

இன்று தமிழ்நாடு முழுவதும் 37715 உயிர்வளி வசதி கொண்ட படுக்கைகளும், 25149 உயிர்வளி வசதி இல்லாத படுக்கைகளும், 8177 தீவிர சிகிச்சை படுக்கைகளும் பயன்பாட்டுக்குத் தயாராக இருக்கின்றன.

தமிழ்நாட்டில் இன்று ஒமைக்ரான் பாதிப்பு:-
மொத்த பாதிப்பு: 121.
குணமடைந்தவர்கள்: 100.
சிகிச்சையில் உள்ளோர்: 18.
இவ்வாறு பொது நலங்குத்துறை தெரிவித்துள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,117.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.