Show all

காவிரியை மீட்க ராஜராஜசோழனிடம் வேண்டுகோள்

தஞ்சை பெரிய கோயில் அருகே அமைந்துள்ள ராஜராஜசோழன் சிலைக்கு தமிழ் மாநில பார்வர்டு பிளாக் கட்சியினர் மாலை அணிவித்தனர். பின்னர் ராஜராஜசோழன் அவர்களே வான்பொய்தின் தான் பொய்யா காவிரி என்று உங்கள் காலத்தில் போற்றப்பட்டு மூன்று போகம் நெல் விளைய செய்து மாடு கட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டி போரடித்து சோழ நாடு சோறுடைத்து என்று வரலாறு படைத்த காவிரி இன்று பொய்த்து போனது. மீண்டும் காவிரியை கர்நாடக அரசிடம் இருந்து மீட்டு வந்து சோழ தேசத்தில் மக்கள் வாழ வழி செய்ய வேண்டும் என்று கோரி மனு அளித்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.