Show all

வாகனச் சோதனை தந்த சோகம்! நிறுத்தாமல் சென்ற இளைஞரின் தாய் பலி; காவல் துறையினர் தாக்கியதில்

வாகனத் தணிக்கையின்போது நிற்காமல் சென்ற இளைஞரை காவல் துறையினர் தாக்கியபோது அவரின் தாய் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
24,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கள்ளக்குறிச்சியில் தீயணைப்பு நிலையம் எதிரே காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரு சக்கரவாகனத்தில் தாயுடன் சென்ற இளைஞரை தடுத்து நிறுத்த காவல் துறையினர் முற்பட்டனர். ஆனால் அந்த இளைஞர் நிற்காமல் செல்ல முயன்றுள்ளார். 

இதையடுத்து இளைஞரை காவல் துறையினர் தாக்கிய போது பின்னால் அமர்ந்திருந்த அய்யம்மாள் மீது அடி விழுந்ததாக தெரிகிறது. இதில் கீழே விழுந்த அய்யம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வாகனச் சோதனைக் காவல்துறையினர் மீதும், காவல்துறையினர் அடவடிக்குக் காரணமான பன்மடங்கு அபராத நடவடிக்கையின் மீதும், கோபத்தை புலம்பல் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர் அப்பகுதி மக்கள்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,332.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.