இராதா கிருட்டிணன்
நகர் தொகுதி இடைத் தேர்தலில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடக் கூடும்
என தகவல்கள் வெளியாகி உள்ளன. செயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதிக்கான
இடைத் தேர்தல் ஏப்ரல் 12-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதி அதிமுக கோட்டையாக இருந்து
வந்தது. ஆனால் அதிமுகவின்
வாக்குகள் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தீபா என 3 ஆக பிரிய வாய்ப்பு இருப்பதாகக் கருதப்
படுகிறது. இது எதிர்க்கட்சியான திமுகவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. இத்தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட மறைந்த
எஸ்.பி. சற்குணம் 2 முறை வெற்றி பெற்றிருக்கிறார். இராதா கிருட்டிணன் நகர் தொகுதியில் கணிசமான அளவுக்கு
நாடார் சமூகத்தினர் வசிக்கின்றனர். இதுவும் எஸ்.பி. சற்குணத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக
கூறலாம். இதனால்தான் கடந்த தேர்தலில் செயலலிதாவை எதிர்த்து எஸ்.பி. சற்குணத்தின் மருமகள்
சிம்லா முத்துசோழனை களமிறக்கியது திமுக. ஆனால் அவர் தோல்வி
அடைந்தார். தற்போது இராதா கிருட்டிணன் நகர் தொகுதி இடைத்தேர்தல்
ஏப்ரல் 12-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பிளவுபட்டுள்ள நிலையில்
நாடார் சமூகத்தின் வாக்குகளை குறிவைத்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட
வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விருகம்பாக்கம்
தொகுதியில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். அங்கு 19,167
வாக்குகளை மட்டுமே தமிழிசை சவுந்தராஜன் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில், நிரந்தரமாக இருக்கும் பாஜக எதிர்ப்பலையால் தமிழிசை சவுந்தராஜன் வைப்புத் தொகை மீட்பதே கடினம்
என்பது தாம் உண்மை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.