Show all

ராம்குமார் மரணத்தால் தூக்கத்தை தொலைக்கும் சிறைத்துறை!

புகைப்படம் வெளியிட்டது யார்? ராம்குமார் மரணத்தால் தூக்கத்தை தொலைக்கும் சிறைத்துறை! சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் மின்சார ஒயரை கடித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர் தற்கொலை செய்துகொள்ளவில்லை எனவும், இந்த மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும், ராம்குமாரின் குடும்பத்தினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் ராம்குமார் மின்சார ஒயரை கடித்து தற்கொலை செய்துகொண்டதில் பல்வேறு முரண்பாடான தகவல்கள் மாறி மாறி வருகின்றன. இதனையடுத்து ராம்குமார் கடித்து தற்கொலை செய்துகொண்ட அந்த மின்சார பெட்டி மற்றும் மின்கம்பியின் புகைப்படம் நேற்று ஊடகங்களில் வெளியானது. சிறையில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்பட்டம் எப்படி வெளியானது என சிறைத்துறையினர் குழப்பத்தில் உள்ளனர். ஏற்கனவே ராம்குமார் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானதற்கு நீதிமன்றம் கேள்விகளை எழுப்பியது. இந்நிலையில் தற்கொலை செய்துகொண்ட மின்சார பெட்டி மற்றும் மின்கம்பியின் புகைப்படம் வெளியானதில் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாகுவோமோ என சிறைத்துறை பொறுப்பாளர்கள் பீதியில் உள்ளதாக பேசப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.