Show all

மாணவர்கள் மீதான காவல்துறை வெறித் தாக்குதல்- திங்களன்று விரிவான விசாரணை

     மாணவர்கள் மீதான காவல்துறையினரின் வெறித்தனமான தாக்குதல் தொடர்பாக திங்கள்கிழமையன்று விரிவான விசாரணை நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

     காவல்துறையினர் சென்னையில் மாணவர்கள், மீனவர்கள் மீது வெறித்தனமாக தாக்குதல் நடத்தியது தொடர்பாக திங்கள்கிழமையன்று விரிவான விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிஅரசர் மகாதேவன் உத்தரவிட்டுள்ளார்.

     வரலாறு காணாத சல்லிக்கட்டுப் புரட்சியின் இறுதியில் மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த மீனவ மக்கள் மீது கொடூர தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது காவல்துறை. மீனவர்களின் குடிசைகள், மீன்சந்தைகள், இருசக்கர வாகனங்களை தீக்கிரையாக்கியது காவல்துறை.

     நூற்றுக்கணக்கான மாணவர்கள், இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது. ராயப்பேட்டை மருத்துவமனையில் தொடர்ந்தும் மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

     இந்தக் கொடூரத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிஅரசர் மகாதேவன், உரிய ஆதாரங்களுடன் திங்களன்று ஆஜராக வேண்டும்; இது தொடர்பாக விரிவான விசாரணை நடைபெறும் என உத்தரவிட்டார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.