Show all

திமுக தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் மடல்!

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக பேரளவாக வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் தொண்டர்களுக்கு திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.

29,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: எதிர்க்கட்சியே இல்லை என்ற இறுமாப்பு கொள்ளாமல் மனசாட்சியே எதிர்க்கட்சி என செயல்படுவோம் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக பேரளவாக வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் தொண்டர்களுக்கு திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.

அந்த மடலில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் பெற்றுள்ள மாபெரும் வெற்றியானது ஐந்து மாத கழக ஆட்சியின் சாதனைகளுக்கு மக்கள் அளித்துள்ள நற்சான்றிதழ்.

எதிர்க்கட்சியே இல்லை என்ற இறுமாப்பு கொள்ளாமல் மனசாட்சியே எதிர்க்கட்சி என செயல்படுவோம்.

தமிழ்நாட்டு ஆட்சிபோலவே உள்ளாட்சியிலும் நல்லாட்சியைத் தொடர்ந்திடுவோம். ஒன்பது மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் வரலாறு போற்றும் வெற்றி. 140 மாவட்ட உறுப்பினர் இடங்களில் 138-ல் வெற்றி 1381 ஊராட்சி ஒன்றிய உறுப்பினருக்கான இடங்களில் 1000-க்கும் கூடுதலாக வெற்றி

உழைத்த கழக உடன்பிறப்புகள், தோழமைக் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி

தமிழ்நாட்டு மக்கள் வழங்கியுள்ள நற்சான்றிதழ்- பொற்சான்றிதழ்தான் இந்த மகத்தான வெறறி.

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

மக்களின் தேவைகளை நிறைவேற்றும் களப்பணியாளர்களாக உழைத்திட வேண்டும்.

மக்கள் நம் பக்கம், நாம் மக்களின் பக்கம், இனி உள்ளாட்சி எங்கும் நல்லாட்சி ஒளிரும். இவ்வாறு அந்த மடலில் குறிப்பிட்டுள்ளார்.
 -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,037.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.