Show all

சுட்டுக் கொல்ல உத்தரவு! நான்கு பேர்களைத் தாக்கிக் கொன்றுள்ள காட்டுப்புலியை

நீலகிரி மாவட்டத்தில், கூண்டில் சிக்காமல் போக்குகாட்டும் ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

15,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: நீலகிரி மாவட்டம் கூடலூரில் நான்கு பேர்களைத் தாக்கிக் கொன்றுள்ள காட்டுப்புலியை, சுட்டுக் கொல்ல தமிழ்நாடு முதன்மை வன அதிகாரி சேகர்குமார் நீரஜ் உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒன்றரை ஆண்டில் முப்பதுக்கும்  மேற்பட்ட கால்நடைகளை ஒரு புலி தாக்கிக் கொன்றுள்ளது. இந்தப் புலிக்கு டி-23 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்புலி மனிதர்கள் மூவரையும் தாக்கி கொன்றுள்ளது. 

இதையடுத்து புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, வண்டலூர் உயிரியல் பூங்காவில் பேணிட உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 7 நாட்களாக கூண்டுகள் அமைத்து வனத்துறையினர் புலியைப் பிடிக்க காத்திருந்தனர்.

இந்நிலையில் இன்று மசினக்குடியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவரை இந்தப் புலி தாக்கிக் கொன்றது. தொடர் முயற்சிகளுக்குப் பிறகும் கூண்டில் புலி சிக்காததுடன் இன்று நடந்த இந்தத் துயர நிகழ்வுக்குப் பிறகு இந்த ஆட்கொல்லி புலியைச் சுட்டுக் கொல்ல தமிழக முதன்மை வன அதிகாரி சேகர்குமார் நீரஜ் உத்தரவிட்டுள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,023.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.