Show all

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையில் இலக்கை நோக்கி தமிழ்நாடு பயணிக்க! ஒன்றிய அரசு விரைந்து தடுப்பூசிகளை வழங்க வேண்டும்

தமிழ்நாட்டில் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் தீர்ந்துவிடும். இந்த நிலையில் கூடுதல் தடுப்பூசிகளை வழங்குமாறு ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார், தமிழ்நாடு நலங்குத்துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன்

04,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்குமாறு ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு நலங்குத்துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இதுவரை மொத்தமாக 4.35 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 4.12 கோடி தடுப்பூசிகளை அரசே செலுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் தீர்ந்துவிடும். இந்த நிலையில் கூடுதல் தடுப்பூசிகளை வழங்குமாறு ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார், தமிழ்நாடு நலங்குத்துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன்

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதோரின் எண்ணிக்கையும் இங்கு  அதிகமாகவே உள்ளது. எனவே உடனே தடுப்பூசிகளை அதிகளவில் வழங்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம். என்றார், தமிழ்நாடு நலங்குத்துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன்
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,012.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.