Show all

காவல்துறை துணை ஆய்வாளர் கொரோனாவுக்கு பலி! சாத்தான்குளம் வழக்கில் கைதான நபர்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறப்பு காவல்துறை துணை ஆய்வாளர் பால்துரை, கொரோனாவுக்கு பலியானார்.

26,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறப்பு காவல்துறை துணை ஆய்வாளர் பால்துரை, கொரோனாவுக்கு பலியானார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல்துறையினர் தாக்கியதில், வணிகர்கள் ஜெயராஜ், மகன் பெனிக்ஸ், ஆகியோர் இறந்தனர். வழக்கை விசாரித்த, தமிழ்நாடு குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை காவலர்கள், காவல்துறை துணை ஆய்வாளர் ஸ்ரீதர், சிறப்பு காவல்துறை துணை ஆய்வாளர் பால்துரை, காவல்துறை துணை ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், காவலர்கள் முருகன், முத்துராஜ், செல்லத்துரை, சாமத்துரை, வெயில்முத்து, தாமஸ் பிரான்சிஸ் ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இரண்டு கிழமைகளுக்கு முன்பு சிறப்பு காவல்துறை துணை ஆய்வாளர் பால்துரைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.