மைல் கல்லில் இந்தி
எழுத்து தொடர்பாக இரட்டை வேடம் போடும் தி.மு.க.வை கலைக்க வேண்டும் என நடுவண் அமைச்சர்
பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தேசிய நெடுஞ்சாலைகளில்
உள்ள மைல் கல்களில் இந்தியில் எழுதுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இந்தியில்
எழுதக்கூடாது எனக் கூறி உள்ளார். 2004-ம் ஆண்டு டிசம்பர் 24-ந் தேதி தி.மு.க. ஆட்சி
தமிழகத்தில் நடந்தது. அப்போது நடுவண் அரசிலும் தி.மு.க. அங்கம் வகித்தது. அன்று தான்
இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது. அப்போதே நடுவண் அமைச்சர் டி.ஆர். பாலு தான் இதற்கான உத்தரவை
பிறப்பித்தார். எனவே டி.ஆர். பாலுவை தி.மு.க.வில் இருந்து நீக்க
வேண்டும். இந்த விவகாரத்தில இரட்டை வேடம் போடுகிறது. எனவே தி.மு.க.வையும் கலைக்க வேண்டும்.
மைல் கல்களில் இந்தியில் எழுவது இந்தி திணிப்பு அல்ல. (வேறென்ன? தமிழ் வளர்ப்பா!)
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.