Show all

வா தலைவா, போருக்கு வா! ரஜினிக்காக இன்று புதிய பாடலை வெளியிடும் ராகவா லாரன்ஸ்

15,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடிகர் ரஜினிகாந்த்தை அரசியலுக்கு அழைக்கும் வண்ணம் ராகவா லாரன்ஸ் ‘வா தலைவா போருக்கு வா என்ற பாடலை உருவாக்கி இன்று வெளியிடுகிறார்.

நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்களுள் ஒருவர் ராகவா லாரன்ஸ். இவர் கடந்த முறை ரஜினியின் பிறந்த நாளுக்கு புதிய பாடல் ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது ரஜினிகாந்த் தனது ரசிகர்களை அழைத்து சந்தித்து வருகிறார்.

கடந்த முறை நடைபெற்ற சந்திப்பின் போது போர் வரும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியபடி படபிடிப்பு பணிகளுக்காக சென்றுவிட்டார் ரஜினி. இந்நிலையில் தற்போது மீண்டும் ரசிகர்களுடனான சந்திப்பு நடைபெற்று வருகிறது.

அவரது சந்திப்பு தமிழக அரசியல்வாதிகளால் ஒவ்வொரு நாளும் உற்று நோக்கப்படுகிறது. மேலும் அவர் நாளை அரசியல் பிரவேசம் தொடர்பாக தலையாய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதாக தெரிவித்திருந்தார் அவரை வரவேற்கும் விதமாகவும், அவருக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும் நடிகர் ராகவா லாரன்ஸ் புதிய பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

‘வா தலைவா போருக்கு வா தலைவா என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல் இன்று காலை 10 மணியளவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,652

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.