Show all

நாம் குரங்குகளாக இருந்த போதிருந்தே காவிரி ஆறு ஓடியது: கமல்

காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து நடிகர் கமலஹாசன் இன்று தனது கருத்தினை சுட்டுரையில் பதிவு செய்துள்ளார். தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து கர்நாடகாவில் பயங்கர வன்முறை வெடித்தது. இது குறித்து கமலஹாசன் பதிவு செய்திருப்பதாவது, நாம் மொழியற்ற குரங்குகளாக இருந்த போதும் காவிரி ஆறு ஓடியது, நமக்குப் பின்னாலும் அது ஒடும். சரித்திர கண்ணாடியில் முகம் பார்த்து வெட்கப்பட நேரிடும் என்று கூறியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.