பாயும் இடமெல்லாம் பசுஞ்சோலை விரித்துச் செல்வதால் பொன்னியாற்றுக்குக் காவிரி என்றும் பெயர்.

பொன்படு நெடுவரையில் தோன்றிப் பாய்வதால் காவிரியாற்றுக்குப் பொன்னி என்றும் பெயர்.

காவிரியின் அகவை கணக்கிட முடியாத பல கோடி ஆண்டுகள்.

காவிரி, பொன்படு நெடுவரை என்கிற தமிழகத்திற்கு சொந்தமான மலையில் தோன்றி தமிழகத்திற்குச் சொந்தமான குமரிக்கடலில் கலக்கிறது.

முப்புறம் கடல் சூழ்ந்த நாடு தமிழ்நாடு. அந்தக் கடல் குமரிக்கடல் அவ்வளவுதான். அந்தக் கடலில் அமைந்த துறைமுகங்களுக்கு தாம் வெவ்வேறு பெயர்கள்.

2029 ஆண்டுகளுக்கு முன் சோழ மன்னன் கரிகாலனால் காவிரியில் கட்டப்பட்ட முதல் அணைக்கட்டு கல்லணை. உலகின் முதல் அணைக்கட்டும் அதுதான்.

பல்லாயிரம் ஆண்டுகளாக கடந்த 900 ஆண்டுகளுக்கு முன்னர் வரை காவிரி தொடங்கி முடியும் முழுபகுதியும் தமிழர்களுடையதாக இருந்த நிலையில், தமிழர் காவிரி நீர் பயன்பாட்டிற்கு எந்தச் சிக்கலும் எழவில்லை.

900 ஆண்டுகளுக்கு முன்னம் காவிரி தொடங்குமிடத்தில் தோற்றுவிக்கப்பட்ட கன்னட அரசு, முதன் முதலாக காவிரியைத் தடுத்து அணைகட்டி அன்றே தமிழர்களுக்கு சோதனை ஏற்படுத்த, அணை என்று சிறு சிறு தடுப்புகளை ஏற்படுத்தி காவிரியின் திசையை மாற்ற முனைந்தது.

இரண்டாம் இராசராசசோழன் பெரும் படையுடன் சென்று தடுப்புகளை தகர;தெறிந்து காவிரியை மட்டும் மீட்டார். காவிரி தொடங்கும் இடத்தை கைப்பற்றாமல் விட்டதுதான் பிழை. அதன் பிறகு 350 ஆண்டுகளுக்கு முன்னம் மைசூர் அரசு மீண்டும் காவிரி சிக்கல் ஏற்படுத்த முயன்ற போது அரசி மங்கம்மாளும், தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னரும் பெரும் படையுடன் சென்றதும் படை செல்லும் முன்பே கடும் மழையால் அணை உடைந்ததும் வரலாறு கூறுகிறது.

அதன்பின் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1867ல் மைசூர் ஆட்சிக்குட்பட்ட பகுதியிலும், 1877ல் தமிழகம் அடங்கிய சென்னை மாகாணத்தில் ஏற்பட்ட பஞ்சத்தாலும் இலட்சக்கணக்கான மக்கள் மாண்டனர். இதை தடுக்கும் எதிர்காலத்திட்டத்துடன்தான் மைசூரில் 44 டி.எம்.சி. கொள்ளளவு உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையும், மேட்டூரில் 93 டி.எம்.சி கொள்ளவுள்ள அணையும் கட்டப்பட்டது. இதன் விளைவாக உருவானவைதான் 1892, 1924ம் ஆண்டுக் காவிரி நீர் ஒப்பந்தங்கள்.

காவிரி தொடங்கும் இடம் என்கிற உடைமையைத் தமிழன் இழந்ததனால் காவிரி மீதான உரிமை போராட்டம் முடித்து வைக்க மனமில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தமிழன் 2000 ஆண்டுகளாக, காவிரி மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் ஏதாவதொரு உடைமையை இழந்து கொண்டுதான் இருக்கிறான்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.