மறு உத்தரவு வரும் வரை- சென்னையில் உள்ள மெரினா, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 18,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தினால், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அந்த வரிசையில் சென்னையில் உள்ள மெரினா, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளுக்கும் பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை பொதுமக்களுக்கு மணல் பரப்பில் அனுமதியில்லை என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. நடைப்பயிற்சி செல்வோர் மற்றும் தனித்துவ நடைபாதையில் மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,116.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.