Show all

மதுரையில் ஹிஜாப் அணிந்த பெண்கள் வாக்களிப்பதை எதிர்த்த மதுரை பாஜக முகவர் கைது

'இந்தியா மதச் சார்பற்ற நாடு. அனைத்து வாக்காளர்களுக்கும் அவர்களுடைய மத நம்பிக்கையைப் பின்பற்ற உரிமை உள்ளது. அரசமைப்புச் சட்டப்படி, யாரும் எந்த உடையை வேண்டுமானாலும் அணிந்து வந்து வாக்களிக்கலாம்.' என்றார், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார்.

08,மாசி,தமிழ்த்தொடராண்டு-5123: மதுரை மேலூரில் முகமதியப் பெண்கள் அணியும் முக்காடு (ஹிஜாப்) அணிந்து வந்த வாக்காளருக்கு- தமிழ்நாட்டில் வழக்கத்தில் இல்லாத முன்னெடுப்பாக-  எதிர்ப்பு தெரிவித்த பாஜக முகவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

முகமதியப் பெண்கள் அணியும் முக்காடு அணிந்து மதுரை மேலூரில் வாக்களிக்க வந்த முகமதியப் பெண்களின் அந்த முக்காடை- தமிழ்நாட்டில் வழக்கத்தில் இல்லாத முன்னெடுப்பாக-  எதிர்ப்பு தெரிவித்து பாஜக முகவர் அகற்ற வேண்டும் எனக் கூறி ஏற்படுத்திய பரபரப்பால், வாக்குப்பதிவு சற்று நேரம் நிறுத்தப்பட்டது. பிற கட்சி முகவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் நேற்று மாலை அவரை மதுரை மாவட்ட காவல்துறை கைது செய்தது.

அரசு ஊழியரைப் பணிசெய்ய விடாமல் தடுத்தல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கான இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 8வது வார்டுக்கான தேர்தல், அல்அமீன் பள்ளி வாக்குச் சாவடியில் நடந்து வந்தது. அப்போது, அங்கு வாக்களிக்க வந்த முகமதியப் பெண்களை முகமதியப் பெண்கள் அணியும் முக்காடை அகற்றிவிட்டு வாக்களிக்குமாறு கூறி பாஜகவின் வாக்குச்சாவடி முகவர் கிரிராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

பாஜக முகவருக்கு மறுப்பு தெரிவித்த திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள், முகமதியப் பெண்கள் அணியும் முக்காடு அணிவது அவருடைய மத உரிமை அதைக் கேள்வி கேட்கக் கூடாது என்று கூறினார்கள்.

இதனால், சிறிதுநேரம் வாக்குபதிவு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக வாக்குச்சாவடி முகவர் வாக்குபதிவு மையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு வாக்குபதிவு மீண்டும் தொடங்கியது.

அல்-அமீன் பள்ளியில் செயல்பட்டு வரும் வாக்குச்சாவடியில் பதட்டமான சூழ்நிலை நிலவிய காரணத்தால் அதைத் தொடர்ந்து கூடுதல் காவல்துறையினர் அங்கு பாதுகாப்பிற்காக பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மாற்று பாஜக முகவராக உசா என்பவர் நியமனம் செய்யப்பட்ட சிறிது நேரத்தில் வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கி நடைபெற்றது.

முகமதிய வாக்காளர்கள், 'முகமதியப் பெண்கள் அணியும் முக்காடு' அணிந்து வந்ததால் அடையாளம் காண முடியவில்லை, என, வாக்குச் சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட கிரிராஜன், தனது காரணமாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார் 

இதற்கிடையில் தேர்தல் அதிகாரிகள் 'முகமதியப் பெண்கள் அணியும் முக்காடு' அணிந்தவரை தாங்கள் பார்த்து உறுதி செய்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்தப்பாடு குறித்துப் பேசிய மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், 'வாக்குப் பதிவுக்கு என்ன ஆடை அணிந்து வர வேண்டும் என்பது அவரவருடைய விருப்பம். அதில் யாரும் தலையிட முடியாது. தொடர்புடைய வாக்குச்சாவடி பாஜக முகவர் வெளியேற்றப்பட்டு, அந்தக் கட்சி சார்பில் வேறு ஒருவர் முகவராக அமர்த்தப்பட்டுள்ளார். இந்தப்பாடு குறித்து மாவட்ட ஆட்சியரிடம் விசாரித்து அறிக்கை அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது. மேலூரில் 'முகமதியப் பெண்கள் அணியும் முக்காடு' அணிந்து வாக்களிக்க வந்தவரை எதிர்த்தவர்கள் மீது விசாரித்து ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார்.' என்று கூறினார்.

மேலும், 'இந்தியா மதச் சார்பற்ற நாடு. அனைத்து வாக்காளர்களுக்கும் அவர்களுடைய மத நம்பிக்கையைப் பின்பற்ற உரிமை உள்ளது. அரசமைப்புச் சட்டப்படி, யாரும் எந்த உடையை வேண்டுமானாலும் அணிந்து வந்து வாக்களிக்கலாம்.' என்றார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,165.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.