Show all

பொங்கல் திருவிழாவிற்கு சொந்த ஊர் செல்வதற்கு தொடர் வண்டியின் அனைத்துப் பயணச் சீட்டுக்களும் விற்றுத் தீர்ந்தன.

29,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொங்கல் திருவிழாவிற்கு இன்னும் தொன்னூறு நாட்;களே இருக்கும் நிலையில், பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பான பயணத்திற்கு, தொடர்வண்டிக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்து சீட்டுக்களும் நிறைவடைந்தன. ஏராளமானோர் தொடர்வண்டி நிலைய பயணச்சீட்டு வழங்குமிடங்களிலும், இயங்கலை வாயிலாகவும் பயணச் சீட்டுக்களை முன்பதிவு செய்தனர்.

இதனால் வெகு விரைவாக முன்பதிவு நிறைவடைந்ததால் ஏராளமானோர் ஏமாற்றம் அடைந்தனர். பொங்கலுக்கு ஒருநாள் முன்பு பயணிப்பதற்கான பயணச்சிட்டு முன்பதிவு நாளையும், பொங்கல் அன்று பயணிப்பதற்கான பயணச்சீட்டு முன்பதிவு ஞாயிறு அன்றும் தொடங்குகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,910.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.